News August 9, 2024

மானிய விலையில் கோழி குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டினக் கோழிக்குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம்) 50 விழுக்காடு மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய சான்றுகளை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2025

மயிலாடுதுறை: 7 நாட்களுக்கு இலவசம்!

image

தரங்கம்பாடி அருகே உள்ள டேனிஷ் கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1620ல் கட்டப்பட்டது. அருகாட்சியமாக செயல்படும் இக்கோட்டையில் அரசர்களின் புகைப்படம், வெடி கிடங்கு, 16 ஆம் நூற்றாண்டின் பெரிய கப்பலின் உடைந்த பாகம் உள்ளது. இந்நிலையில் உலக சுற்றலா தினத்தை முன்னிட்டு இன்றிலிருந்து நவ.25வரை இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News November 19, 2025

மயிலாடுதுறை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மழைக்காலங்களில் மின்விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, மாவட்ட காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் ஈரமான கைகளுடன் அழைப்பு மணி அல்லது மின்சாதனங்களை தொடக்கூடாது. சுவர் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மின் இணைப்பை கவனமுடன் கையாள வேண்டும். நீரில் மூழ்கிய மின்கம்பங்கள் அருகே செல்லக் கூடாது.

error: Content is protected !!