News August 25, 2024
மானியத்தில் மின்சார மோட்டார் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், மானியத்துடனான மின்சார மோட்டாா் பம்ப் செட்டுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா். 3 ஏக்கா் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டாா் பம்ப்செட் மாற்றுவதற்கும் அல்லது வாங்குவதற்கும் மானியமாக ரூ.15,000அல்லது மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
Similar News
News November 19, 2025
அரியலூர் மாவட்டத்தில் 55.2 மில்லி மீட்டர் மழை

அரியலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதில் நேற்று அரியலூரில் 11mm, திருமானூரில் 2.8mm, ஜெயங்கொண்டத்தில் 8mm, செந்தறையில் 7mm, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14mm. குருவாடியில் 3mm, தா.பழூரில் 7mm மழையும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
News November 19, 2025
அரியலூர் மாவட்டத்தில் 55.2 மில்லி மீட்டர் மழை

அரியலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதில் நேற்று அரியலூரில் 11mm, திருமானூரில் 2.8mm, ஜெயங்கொண்டத்தில் 8mm, செந்தறையில் 7mm, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14mm. குருவாடியில் 3mm, தா.பழூரில் 7mm மழையும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


