News April 15, 2025
மானாம்பள்ளி மலையேற்றம் நாளை முதல் தொடக்கம்

கோயம்புத்தூரில் நாளை முதல் ‘டிரெக் தமிழ்நாடு’ மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. முதல்கட்டமாக வால்பாறை, மானாம்பள்ளி வழித்தடம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வனத்துறையின் இணையதளமான https://trektamilnadu.com இல் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 6, 2025
கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. பயிற்சி முடித்தால் வேலை வாய்ப்பு உறுதிசெயப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 6, 2025
கிணத்துக்கடவு அருகே பயங்கர விபத்து: மாணவர் பலி

கிணத்துக்கடவு அருகே லாரி மீது பைக் மோதியதில் பைக்கில் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், ஜெகன் (21) என்ற மாணவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 5, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


