News October 23, 2024

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை வீரர்

image

நெல்லை மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பாளை மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி மாணவர் யஷ்வந்த்ராஜ் 3000 மீட்டர், மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2ம் பரிசு வென்றுள்ளார். மேலும் தனிநபர் சாம்பியன் விருதும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற இவரை சபாநாயகர் அப்பாவு இன்று (அக்.22) பாராட்டினார்.

Similar News

News August 5, 2025

JOB ALERT: நெல்லை கூட்டுறவு வங்கியில் வேலை

image

நெல்லை இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கும் மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நெல்லைக்கு குறிப்பிட்ட அளவு காலியிடங்கள் உள்ளன. ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து பார்க்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு செப். 12ல் நடைபெறும். அரசு வேலையில் தேடுவோருக்கு SHARE செய்யவும்.

News August 5, 2025

நெல்லையில் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்

image

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அரசு சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெருமாள்புரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT

News August 5, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஆக.04) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!