News August 24, 2024
மாநிலத்தில் சிறந்த பள்ளி விருது

அரசு பள்ளியில் உயர் கல்விக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வியுடன் நீட், ஜெ.இஇ மற்றும் பிற உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரி பள்ளி வீதம் மாநில அளவில் 40 பள்ளிகள் செயல்படுகிறது. இதில் சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டன.இதில் இந்தாண்டுக்கான விருதை கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி பெற்றது.
Similar News
News November 11, 2025
சிவகங்கை: 3 அரசு பள்ளிகளுக்கு விருது

சிவகங்கை மாவட்ட அளவில் 3 அரசு தொடக்க பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாக்கோட்டை ஒன்றியம் சின்னவேங்காவயல் நடுநிலைப்பள்ளி, இளையான்குடி புதுார் எண் 4 தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
News November 11, 2025
சிவகங்கை: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5.. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் ரூ.1.71 கோடி கையாடல்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் டிரஸ்ட்டிற்கு சொந்தமான ரூ.1.71 கோடி மதிப்பிலான நிதியை சிலர் கையாடல் செய்துள்ளதாக கோவிலின் நிர்வாக அறங்காவலர்களான குமரப்பன் செட்டியார் மற்றும் பழனியப்ப செட்டியார் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத்திடம் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


