News January 23, 2025

மாநகர காவல் துணை ஆணையாளர் நியமனம்

image

நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளராக விஜயகுமாரை தமிழ்நாடு அரசு இன்று (ஜன.23) நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர் விரைவில் நெல்லை மாநகரின் காவல்துறை துணை ஆணையாளராக பொறுப்பேற்க உள்ளார். புதிதாக நெல்லை மாநகரின் காவல்துறை ஆணையாளராக பொறுப்பேற்க உள்ள விஜயகுமாருக்கு காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

நெல்லை: விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

image

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த முத்தரசு என்பவருடைய மகள் பரமேஸ்வரி (28). இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்தார். அவரை மீட்டு பாளை ஜகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரசிங்கபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News December 6, 2025

நெல்லை போலீசின் பாராட்டை பெற்ற டீக்கடைகாரர்

image

சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57) என்பவர் 30.11.2025 அன்று தனது கடையின் முன்பு, ஒரு பேக்கில் ரூ. 2,50,000/- பணம் கேட்பாரற்று நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அந்த பேக்கை எடுத்து, உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வந்து நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இன்று எஸ்பி சிலம்பரசன் நேரில் பாராட்டினார்.

News December 6, 2025

மாவட்ட அளவில் கலைப்போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பாக மறைந்து கிடக்கும் கலைத்திறனை மாணவர்களிடமிருந்து வெளிக்கொண்டுவரும் வகையில் வருகின்ற 29ஆம் தேதி குரல் இசை பரதநாட்டியம் ஓவியம் கிராமிய நடனங்கள் உள்ளிட்ட வச்சிருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா பள்ளியில் வைத்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!