News May 23, 2024

மாநகராட்சி முக்கிய அறிவிப்பு 

image

குமரி: சில வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைக்காலம், இரவு நேரங்களில் செப்டிக் டேங்க்கிற்கு கழிவுகள் செல்வதை தடுத்து, மாற்று குழாய்கள் மூலம் மழைநீர் வடிகாலில் விட்டு வருகின்றனர். ஆய்வின் போது இதை கண்டு பிடித்தால் முதலில் ₹50,000, 2வது முறை சிக்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2025

இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE* பண்ணுங்க

News April 20, 2025

கன்னியாகுமரியின் சிறந்த கோயில்கள் & வழிபாட்டு நேரம்

image

1. குமாரி அம்மன் கோவில்
காலை 4.30 – 12.00 மற்றும் மாலை 4.30 – இரவு 8.00

2.ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்
காலை 6.00 – 11.00 & மாலை 5.00 – 8.00

3.திருநந்திக்கரை குகைக் கோயில்,திருவட்டாறு
காலை 5:00 – 11:00 & மாலை 5:00 – இரவு 8:00

4.நாகராஜா கோவில்,கன்னியாகுமரி
காலை 4.00 – 12.00 & மாலை 5.00 – 8.30

5.தாணுமாலயன் கோவில்,சுசீந்திரம்
காலை 4.30 – 12.30 & மாலை 4.30 – 8.30

*ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

குமரி : காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் 2500 முதல் 3500 வரை ரூபாய் விலக்கு அளிக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தகவல் பெற அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம் என அறிவிப்பு.

error: Content is protected !!