News November 23, 2024

மாநகராட்சி புகார் அளிக்க WhatsApp எண் வெளியீடு

image

திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேக்கம், குடிநீர் கசிவு, குப்பை, பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்கள் புகார்களை மாநகராட்சி வாட்ஸ்அப் புகார் எண்ணான 9489930261 என்ற எண்ணில் குறைகளை தெரிவிக்கலாம் என மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

நெல்லை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

image

திருநெல்வேலி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

நெல்லை: விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

image

விகேபுரம் அருகே காக்காநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் அங்குள்ள யூனியன் கவுன்சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துக்குமார் உயிரிழந்தார். இது குறித்து விகே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 22, 2025

நெல்லை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து<<>> Grievance Redressal, திருநெல்வேலி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!