News November 23, 2024

மாநகராட்சி புகார் அளிக்க WhatsApp எண் வெளியீடு

image

திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேக்கம், குடிநீர் கசிவு, குப்பை, பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தங்கள் புகார்களை மாநகராட்சி வாட்ஸ்அப் புகார் எண்ணான 9489930261 என்ற எண்ணில் குறைகளை தெரிவிக்கலாம் என மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

நெல்லை: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

image

நெல்லை மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க போன் -ல இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்க போன் நம்பர் பதிவு செய்யுங்க. இனி உங்க போனுக்கு தேவை இல்லாத அழைப்புகள் , மெசேஜ் வராது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 25, 2025

நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 25, 2025

நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகில் ஈரத் துணியுடன் அருந்து விழுந்த மின்வயரை பார்த்து, அதனை யாரேனும் தொட்டுவிடக்கூடாது என்று அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்த திசையன்விளை போலீசார் தனுஷின் உடலை மீட்டு நெல்லை G.H-க்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!