News April 22, 2025
மாநகராட்சி ஒப்பந்த புள்ளியில் முறையீடு என பாஜக புகார்

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஏப்.4 அன்று ஒப்பந்த புள்ளிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இறுதி ஏப்.25 என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த தேதி திறக்கப்படுவதற்கு முன்பே மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இதில் முறைகேடுகள் நடத்து உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
Similar News
News November 2, 2025
தூத்துக்குடியில் மாமனாரை கொலை செய்த மருமகன்

தூத்துக்குடி 1-ம் கேட் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கும் இவரது மருமகன் அஜய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். நேற்று ஏற்பட்ட தகராறில் அஜய், ஆறுமுகத்தை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார். இது சம்பந்தமாக மத்திய பாகம் போலீசார் அஜயை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 2, 2025
தூத்துக்குடி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் 32 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில்<
News November 2, 2025
தூத்துக்குடி: தாய் – மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு

முள்ளகாடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம். இதய பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பாக்கியம் மகன் முத்துராஜ் நேற்று முன்தினம் இறந்தார். அன்று இரவு பாக்கியமும் இறந்துவிட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து தாய், மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


