News April 22, 2025

மாநகராட்சி ஒப்பந்த புள்ளியில் முறையீடு என பாஜக புகார்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஏப்.4 அன்று ஒப்பந்த புள்ளிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இறுதி ஏப்.25 என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த தேதி திறக்கப்படுவதற்கு முன்பே மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இதில் முறைகேடுகள் நடத்து உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

Similar News

News January 5, 2026

தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி அருகே கூட்டுக்காரன்காடு பஞ்சாயத்து மங்களகிரி தனியார் பள்ளியில் நாளை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News January 5, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மின் ஊழியர் கைது

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இநநிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீட்டில் மின்சார வேலை பார்ப்பதற்காக சென்றபோது, அங்கு உள்ள சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பிரிந்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!