News April 22, 2025

மாநகராட்சி ஒப்பந்த புள்ளியில் முறையீடு என பாஜக புகார்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஏப்.4 அன்று ஒப்பந்த புள்ளிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இறுதி ஏப்.25 என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த தேதி திறக்கப்படுவதற்கு முன்பே மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இதில் முறைகேடுகள் நடத்து உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

Similar News

News December 24, 2025

தூத்துக்குடி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

தூத்துக்குடி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

News December 24, 2025

தூத்துக்குடி: வெட்டிக்கொலை – கல்லூரி மாணவன் கைது!

image

ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (42) என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து (21) என்ற கல்லூரி மாணவனுக்கு பணம் கடனாக கொடுத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முத்து இசக்கிமுத்துவை நேற்று முன்தினம் இரவு ஓட ஓட வெட்டி கொலை செய்தார். வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் முத்துவை நேற்றிவு கைது செய்தனர்.

News December 24, 2025

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் இன்று எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி இல்லாதவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!