News March 27, 2024

மாதவரத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 27, 2025

சென்னை: வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை!

image

அரசின் வேலைவாய்ப்பு & பயிற்சித்துறையின் மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, 10th முதல் டிகிரி வரை படித்து, வேலை இல்லாமலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெறுவோரும், சுய உறுதி மொழி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் கிண்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

News October 27, 2025

திமுகவும் காங்கிரஸும் கொள்கை உறவு கொண்டது-முதல்வர்

image

சென்னை தேனாம்பேட்டையில், காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர், “திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. என் மீது அன்பு கொண்டவர் ராகுல்காந்தி. என்னை அண்ணன் என்றே அழைப்பார். நானும் அவரை சகோதரர் என்று தான் கூறுவேன். திமுகவும்- காங்கிரஸும் தற்போது கொள்கை உறவுகளாக பயணிக்கிறோம்” என தெரிவித்தார்.

News October 27, 2025

சென்னை: மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

image

சென்னை, நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி அக்.27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!