News March 27, 2024

மாதவரத்தில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

மாதாவரம் அடுத்த ஆசசி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மஞ்சம்பாக்கம் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது கோவிந்தன், பிரபு என 2 குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் நிலையில், பிரபு நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

சென்னையில் 12 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

சென்னை மாவட்டத்தில் உள்ள 40.04 லட்சம் வாக்காளர்களில், 70% பேர் மட்டுமே வாக்காளர் திருத்தப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் வாக்காளர்களிடமிருந்து விவரங்கள் பெறப்படாததால், அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

சென்னை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

சென்னை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

News December 12, 2025

சென்னை: சிறுநீர் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

image

சென்னை பாரிமுனை பாலகிருஷ்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் (45). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று இரவு பாலகிருஷ்ணா மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, ஆபிரகாம் உடல் இடது புறம் முழுதும் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!