News April 26, 2025
மாணவி திடீர் மரணம் – வீடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

வன்னியூர் பரகுன்று பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பென்சி லின்டா(25) நேற்று 25ஆம் தேதி மர்ம காய்ச்சல் காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் பரகுன்று கிராமத்தில் இன்று 26ஆம் தேதி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று, அங்குள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News April 27, 2025
மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்

அஞ்சுகிராமத்தில் வடமாநில வாலிபர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். போலீசார் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 27, 2025
குமரியில் பொது இடத்தில் மது அருந்திய 742 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் பொது இடத்தில் மது அருந்தியதாக 742 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.
News April 27, 2025
குமரி அருகே ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி

தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. எண்ணெய் & எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு குமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.