News April 11, 2025
மாணவி தனிமைப்படுத்திய விவகாரத்தில் கைது நடவடிக்கை தேவை

பொள்ளாச்சி அருகே மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்புக்கு வெளியே தேர்வெழுத வைத்து தனிமைப்படுத்திய விவகாரத்தில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா வலியுறுத்தியுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
விருதுநகர்: கொலை செய்யபட்டவர் தலை ஓடையில் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், பெரிய உலகாணியைச் சேர்ந்த ஜே.சி.பி., டிரைவர் மணிகண்டன் கொலை வழக்கில் அவரது தலை ஒடையில் இருந்த கண்டெடுக்கப்பட்டது. பணம் வாங்கி தராததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் 33, உடல் கிடைத்தது. தலை மாயமானது. இந்நிலையில் போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று ஓடையில் கண்டுபிடித்தனர்.மேலும், இது தொடர்பாக கொக்குளம் மதன்ராஜ் 19, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக் கின்றனர்.
News November 16, 2025
விருதுநகர் அருகே தலைகுப்பிற லாரி கவிழ்த்து விபத்து

திருச்சுழி – நரிக்குடி சாலையில் சூச்சனேரி விலக்கு பகுதியில் இன்று அதிகாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விருதுநகரில் இருந்து காரைக்குடிக்கு மளிகை சாமான்கள் ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்த விபத்தில் டிரைவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 16, 2025
விருதுநகர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை வேண்டுமா.!

விருதுநகர் மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


