News May 16, 2024
மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

திண்டுக்கல் பிஎன்சி தா்ம சாஸ்தா அறக்கட்டளை சாா்பில், வசதி வாய்ப்பற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெற விரும்பும் மாணவா்கள், தங்களது கல்வி விவரம், பெற்றோரின் பணி விவரங்கள், மதிப்பெண்கள் பட்டியலுடன் விண்ணப்பத்தினை ஜூன் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 87620 13767 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
திண்டுக்கல்: மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுடன் உயர் கல்வி வழிகாட்டல், அடிப்படை வசதிகள், மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து ஆட்சியர் நேரடியாக கலந்துரையாடி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
News October 14, 2025
வத்தலகுண்டு: ராமச்சந்திரன் உடல் ஒப்படைப்பு

திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் அவரது மனைவி ஆர்த்தி கோரிக்கைகளை ஏற்று, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பேரில், இன்று மாலை ராமச்சந்திரன் உடல் ஆர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
News October 13, 2025
நத்தம் அருகே பெண் விபரீத முடிவு!

நத்தம் அருகே குடகிப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜீனன்(46) என்பவரின் மனைவி சித்ரா (40), இவர் கணவர் வெளியூரில் இருந்த நிலையில் தனது அம்மாவின் வீட்டில் தங்கியிருந்தார். கடன் பிரச்சனைக்காக பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் நேற்று இரவு சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.