News February 17, 2025
“மாணவர் மரணம்: முறையான விசாரணை தேவை”

திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அவரது தாயார் காவல்துறையில் முறையிட்டு கழிவறையில் இருந்த அதிக அளவு இரத்தம் குறித்து கேட்க, “எறும்பு கடித்ததால் வந்திருக்கலாம்” என்று பொறுப்பற்ற முறையில் திமுக அரசின் காவல்துறை தெரிவித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; முறையான விசாரணை தேவை என இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 14, 2025
சேலம்: கொரியர் நிறுவன ஊழியர் தற்கொலை!

சேலம் அடுத்த உத்தமசோழபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (27) வயதான இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அவர் ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 14, 2025
சேலம்: 25,151 மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 51,058 மாணவர்களுக்கும் 55,123 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 1,06,181 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 178 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 11,317 பேருக்கும் 13,842 மாணவிகளுக்கும் மொத்தம் 25,151 மிதிவண்டி வழங்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
News November 14, 2025
சேலத்தில் வேலைவாய்ப்பு: ₹14,000/- சம்பளம்!

சேலத்தில் செயல்பட்டு வரும் VEEJAY GROUP OF COMPANIES-வணிக மேம்பாட்டு நிர்வாகி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குப் பணியமர்த்தப்படுபவர்கள், Company visit ,work orders, promote Steel fabrication போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சம்பளமாக ₹14,000/+Allowance வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இந்தப் பணியிடத்திற்கு<


