News January 22, 2025

மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

image

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.

Similar News

News November 27, 2025

புதுவை: தெலுங்கானா தொழிலாளி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

image

தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடய்யா என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த குன்ன வெங்கடேஷிடம் புதுவையில் ஒப்பந்த அடிப்படையில், வேலை செய்தார். வெங்கடய்யாவுக்கு, உடல்நிலை சரியில்லாததால், அவரை, தெலுங்கானாவுக்கு அனுப்ப குன்ன வெங்கடேஷ் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றபோது, வெங்கடய்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News November 27, 2025

புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

image

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

News November 27, 2025

புதுவை: பரிசுப் பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

image

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நாள்காட்டிகள் (காலண்டர்களை) உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நமது மக்கள் கழக தலைவருமான நேரு, இன்று காந்தி வீதி – வெள்ளாள வீதி இணைப்பு பகுதியில் உள்ள கங்கை விநாயகர் கோயிலில் இருந்து கிறிஸ்துமஸ், 2026-புத்தாண்டு, பொங்கல் மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள் கூறி காலண்டர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

error: Content is protected !!