News January 22, 2025

மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

image

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.

Similar News

News November 25, 2025

புதுச்சேரி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

image

புதுச்சேரி மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை <>இங்கே <<>>க்ளிக் செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க!

News November 25, 2025

புதுவை: மின் இணைப்பு துண்டிக்கப்படும் – எச்சரிக்கை

image

புதுவை மின்துறை நகர செயற்பொறியாளர் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், புதுவை மின்துறை நகர இயக்குதல் பராமரித்தல் கோட்டம், நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட கடற்கரை சாலை, வம்பாகீரைப்பாளையம், திப்புராய்பேட், நெல்லித்தோப்பு, சாரம், பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள்மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

புதுச்சேரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் நேற்று(நவ.24) செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று 25ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!