News January 22, 2025
மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.
Similar News
News November 20, 2025
ஒப்பந்த அடிப்படையில் அரசு உதவி வக்கீல்கள் நியமனம்

புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள உதவி அரசு வக்கீல்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட்டு வருகின்றன. அதன்படி, புதுச்சேரி குற்றவியல் கோர்ட்டு உதவி அரசு வக்கீல்களாக இளங்கோவன், ஜெரால்ட் இமானுவேல், தேவேந்திரன், மகிளா கோர்ட்டு அரசு உதவி வக்கீலாக ஜெயமாரிமுத்து, காரைக்கால் குற்றவியல் கோர்ட்டு அரசு உதவி வக்கீலாக ஏசுராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேற்கண்ட தகவல் புதுவை அரசாணையில் வெளியிடப்பட்டது.
News November 20, 2025
புதுவை: இதற்கு டிச.10-ம் தேதியே கடைசி நாள்!

ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், “பொங்கல் வேட்டி, சேலை திட்டத்தில் பயன்பெற 18 வயது பூர்த்தி அடைந்த புதிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் குடும்பத்தினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்று, வரும் 10.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.
News November 20, 2025
புதுகை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

புதுகை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


