News June 28, 2024

மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

image

புதுகை, நரிமேடு வசந்தபுரி நகரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.350 பயிற்சியின் முடிவில் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோா் 04322 225575, 94861 52007 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Similar News

News September 15, 2025

புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் உள்ள மறமடக்கி, அறந்தாங்கி, தல்லாம்பட்டி, அழியாநிலை மற்றும் அரிமளம் ஆகிய துணைமின் நிலையங்களின் நாளை (16/9/2025) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News September 15, 2025

அன்பு கரங்கள் நிகழ்வில் ஆட்சியர் பங்கேற்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நாளை (15.09.2025) காலை 10:30 மணியளவில் அன்புக் கரங்கள் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!