News June 28, 2024
மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுகை, நரிமேடு வசந்தபுரி நகரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.350 பயிற்சியின் முடிவில் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோா் 04322 225575, 94861 52007 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
Similar News
News October 15, 2025
புதுக்கோட்டைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்ட, நாகை,மயிலாடுதுறை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News October 15, 2025
புதுக்கோட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை இந்திய விடுதலைக்கு பின் மார்ச் 3, 1948-இல் இந்திய பேரரசுடன் இணைக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்தின் ஒரு கோட்டமாக விளங்கியது. பின்னர் ஜனவரி 14, 1974 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்த முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. SHARE பண்ணுங்க.
News October 15, 2025
புதுகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம். நிலத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய clip.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க