News November 24, 2024

மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மண்ணச்சநல்லூர் அருகே நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி பெற வேண்டும் என்றார். சாலப்பட்டியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் உங்கள் பிள்ளைகளை உயர் கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். வேலைக்கு அனுப்பக்கூடாது அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க உயர் கல்வி பயில அனுப்ப வேண்டும் என்றார்.

Similar News

News November 25, 2025

திருச்சி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா ?

image

திருச்சி மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை <>இங்கே க்ளிக் <<>>செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க!

News November 25, 2025

திருச்சி: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பைக்

image

துவரங்குறிச்சி அடுத்த இச்சடிபட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது டூவீலர் திடீரென தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 25, 2025

திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

image

திருச்சி மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!