News August 2, 2024
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம். புதுச்சேரி பிராந்திய அளவில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ. 10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பாடப்பிரிவு வாரியாக 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்க ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
புதுச்சேரி: கவர்னர் முன்னிலையில் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் வால் தி லோயர் மாகாணம் இடையில் கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உணவுத்துறை மேலாண்மை, இந்தோ-பிரெஞ்சு கூட்டுறவு, உணவு மற்றும் பாரம்பரியம் சார்ந்த திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.11) துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடைபெற்றது.
News November 12, 2025
புதுச்சேரி: கார் மோதி தொழிலாளி படுகாயம்

காரைக்கால் அகலங்கன்னு கிராமம் சிவக்குமார், இவர் விவசாய தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டிபன் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் விழிதியூர் சென்றார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 12, 2025
புதுச்சேரி: நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி கட்டிட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2024-25ம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவி மற்றும் பண பயன் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கான, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களுடன் அந்தந்த பிராந்திய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


