News February 16, 2025

மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

image

ஈரோடு ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த அலாவுதீன் (31). இவா் ஈரோட்டில் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அலாவுதீன் பணியாற்றும் பள்ளியில் +2 படிக்கும் 17 வயது மாணவரின் கைப்பேசிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, தனிமையில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர்கள் புகார் கொடுக்க, போலீஸ்சார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனார்.

Similar News

News December 18, 2025

ஈரோடு: சத்துணவு மையத்தில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்-ரூ.3000 முதல் ரூ.9,000 ஆகும். விண்ணப்பங்களை https://erode.nic.in/ என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன.9.26-க்குள் மாநகராட்சி, நகராட்சி அலுவலங்களில் வழங்க வேண்டும். (வேலைதேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News December 18, 2025

யார் இந்த காலிங்கராயன்

image

லிங்கையன் கவுண்டர் என்ற இயற்பெயர் கொண்டர். இவர் 13-ம் நூற்றாண்டில் முக்கியப் பங்காற்றினார். வீரபாண்டியனின் படைத்தளபதியாகி, தலைமை அமைச்சராக உயர்ந்தார். இவருக்கு வீரபாண்டியனால் “காலிங்கராயன்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் கட்டிய கால்வாயின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் 5-ம் தேதி “ காலிங்கராயன் தினம்” கொண்டாடப்படுகிறது.

News December 18, 2025

ஈரோடு: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!