News August 24, 2024

மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

image

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

Similar News

News November 23, 2025

நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 23, 2025

ராசிபுரத்தில் நடந்த கோர சம்பவம்!

image

ராசிபுரம்–அணைப்பாளையம் ரயில் பாதையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நேற்று மாலை இருந்தது. முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார். சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தின் மூலம் அவர் ராசிபுரம் வரதன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (51) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 23, 2025

நாமக்கல்லில் லாரி திருட்டு – பெரம்பலூரை சேர்ந்தவர் கைது!

image

நாமக்கல்லில் செந்தில்குமார் தனக்கு சொந்தமான லாரியை கணேஷ் என்பவரின் பட்டறையில் பழுது நீக்க கடந்த 12ந் தேதி விட்டுள்ளார். இதனை அடுத்து லாரியை காணவில்லை என நல்லிபாளையம் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் செந்தில்குமார் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பெரம்பலூர் ஆலத்தூர் வரகுபாடியை சேர்ந்த முத்துகுமாரை கைது செய்து லாரியை மீட்டனர்.

error: Content is protected !!