News August 24, 2024
மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
Similar News
News November 28, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர்-4, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள், விவரச் சீரமைப்பு செய்ய வேண்டியவர்கள் அனைவரும் BLO-களை தொடர்பு கொண்டு உடனே விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 28, 2025
நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 28, 2025
மோகனூர் அருகே மொபட் மோதி வியாபாரி பலி!

மணப்பள்ளியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி தண்டபாணி (50), வேலூரில் வெற்றிலை விற்றுவிட்டு அக்.6-ம் தேதி ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது, மணப்பள்ளி ஈஸ்வரன் கோவில் சாலையின் அருகில் பின்னால் வந்த மொபட் மோதியதில் கடுமையாக காயமடைந்தார். நாமக்கல், கோவை தனியார் மருத்துவமனைகள் மற்றும் பின்னர் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று உயிரிழந்தார். மோகனூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


