News August 24, 2024

மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

image

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

Similar News

News September 18, 2025

நாமக்கல் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர், ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் காலை 8:30 மணிக்கு 20,671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

நாமக்கல்: மதுக்கடை அகற்ற எம்.பி. வலியுறுத்தல்!

image

மோகனூரில் அருள்மிகு ஸ்ரீ நவலடியான் கோயில் மிக அருகில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இதனால் இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அப்பகுதியினருக்கும் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே கடையை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் எம்.பி மாதேஸ்வரனிடம் கோரிக்கை வைத்தனர்.இக் கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் எம்பி மாதேஸ்வரன் வலியுறுத்தல்!

News September 18, 2025

நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து பலி!

image

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த லட்சுமிபாளையம் பகுதியில் வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வெறிநாய் கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளில் இதே பிரச்சனை இருப்பதாக புகார் எழுகிறது.உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!