News August 24, 2024

மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

image

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

Similar News

News December 3, 2025

நாமக்கல்: வாக்காளர் திருத்த படிவம் காலஅவகாசம் நீட்டிப்பு!

image

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட SIR வாக்காளர் திருத்த படிவங்களை சமர்ப்பிக்க டிச.04ந் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ந் தேதி வரை நீட்டிப்பு செய்து காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கடைசி தேதிக்கு முன்பாக படிவங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

News December 3, 2025

நாமக்கல்: ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கான ஔவையார் விருது பெற டிச.31ந் தேதி வரை நாமக்கல்லை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து இன்று (புதன்) மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயில் உள்ளன. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! நாமக்கலில் இருந்து பெங்களூரூ, மைசூரு, ஹூப்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல நல்ல ரயில்வசதி உள்ளதால் நாமக்கல் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

error: Content is protected !!