News August 24, 2024
மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
Similar News
News December 12, 2025
நாமக்கல் : கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

நாமக்கல் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 12, 2025
நாமக்கல்: வாக்காளர்களே! SIR UPDATE

நாமக்கல் மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பள்ளிப்பாளையம் அருகே வசந்த நகரை சேர்ந்த குமரன் 40, ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கதிர், 20, என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி குமரன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு புதுச்சேரி சென்று விட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் வைத்திருந்த, ரூ.2.21 லட்சத்தை திருடியதாக விசாரணையின் அடிப்படையில் கதிரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


