News August 27, 2024
மாடு மோதியதில் பைக்கில் சென்ற பெண் உயிரிழப்பு

தென்காசி அடுத்த மேலகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி மனைவி சுப்புலட்சுமி (75). நேற்று திரவிய நகர் பகுதியில் வயல் வேலைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவருடன் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே மாடு மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின்னர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News September 17, 2025
சங்கரன்கோவில் பகுதியில் மின்தடை அறிவிப்பு

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் திரு. மா.பாலசுப்ரமணியம் அவர்களின் செய்தி குறிப்பு நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் வரும் 18.09.2025 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்று பெரியகோவிலான்குளம். சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம். சில்லிகுளம் சூரங்குடி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News September 16, 2025
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை மாவட்ட அளவிலான (ம) மண்டல அளவிலான போட்டிகள் பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பொது மக்கள் பிரிவு, அரசு ஊழியர்கள் பிரிவு என ஐந்து பிரிவுகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா தென்காசி மாவட்ட விளையாட்டு மையத்தில் (செப்.18) காலை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (16-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.