News August 27, 2024
மாடு மோதியதில் பைக்கில் சென்ற பெண் உயிரிழப்பு

தென்காசி அடுத்த மேலகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி மனைவி சுப்புலட்சுமி (75). நேற்று திரவிய நகர் பகுதியில் வயல் வேலைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவருடன் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே மாடு மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின்னர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 23, 2025
BREAKING: தென்காசி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார் . SHARE
News November 23, 2025
தென்காசி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்!

தென்காசி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .
1.<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News November 23, 2025
JUST IN: தென்காசி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்க.


