News May 15, 2024
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் சின்னத்துரை என்பவர் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணியாற்றி ரபிக் இஸ்லாம் (35) மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
பூந்தமல்லி: வடமாநில வாலிபர் கொலை; 3 பேருக்கு சிறை

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 2017ஆம் ஆண்டு முகம் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரதீப் வழக்கில், ஹரிகுமார், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகிய 3 பேருக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று(நவ.25) தீர்ப்பளித்தது. இதில் ஹரிகுமாருக்கு 7 ஆண்டுகள், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகியோருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.
News November 26, 2025
கிராம உதவியாளர் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 151 பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுதும் திறனுக்கான தேர்வு (நவ-29) அன்று நடைபெற இருந்தது. ஆனால் தற்காலிகமாக தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும், மேற்படி தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், திருவள்ளூர் மாவட்ட நிருவாகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
News November 26, 2025
திருவள்ளூர்:பொது மக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரிக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தேர்வு கூட்டம் இன்று (நவ.26) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.


