News May 17, 2024

மழை சீசன்: கவனமாக பஸ்களை இயக்க அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன் தினம் (மே 15) இரவு வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய மழை நீரை அரசு பஸ் ஒன்று சிக்கியது. இந்த நிலையில் தரைப்பாலம், சுரங்க பாலம், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தி உள்ளது.

Similar News

News November 27, 2025

மாநகரின் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம் அறிவிப்பு

image

மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகரில் இன்று இரவு முதல் நாளை நவம்பர் 27 காலை 6 மணி வரை காவல் பணியில் உள்ள முக்கிய உயர் அதிகாரிகள் குறித்த விவரத்தை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது அவர்களது கைபேசி எண் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு அவசர காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 27, 2025

இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விவரம், காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News November 26, 2025

நெல்லை பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி நாளை துவக்கம்

image

திருநெல்வேலி மாவட்ட கால்பந்துக் கழகம், பெல்பின்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை (நவ.27) தொடங்குகின்றன. இப்போட்டி, நவ.30ம் தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும் நடை பெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்கின்றன. நிறைவு நாளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.

error: Content is protected !!