News May 17, 2024

மழை சீசன்: கவனமாக பஸ்களை இயக்க அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன் தினம் (மே 15) இரவு வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய மழை நீரை அரசு பஸ் ஒன்று சிக்கியது. இந்த நிலையில் தரைப்பாலம், சுரங்க பாலம், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தி உள்ளது.

Similar News

News October 31, 2025

ஊர் திரும்பிய பதக்க நாயகிக்கு உற்சாக வரவேற்பு

image

நெல்லை நாரணமாள்புரம் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த எட்வினா என்ற வீராங்கனை பக்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். ஓட்டப்பந்தயம் மற்றும் மெட்லி ரிலே ஆகிய பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்ற நிலையில் ஊர் திரும்பிய எட்வினாகுக்கு தெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

News October 30, 2025

நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News October 30, 2025

நெல்லை: சினிமாவை மிஞ்சும் நூதன கொள்ளை

image

பேட்டை MGP பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காதர் பீவி என்பவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் பெண் ஒருவர் மகளிர் உதவித்தொகைக்கு கணக்கெடுப்பு நடப்பதாக கூறி விஏஓ அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கே கழுத்தில் உள்ள செயினை கழற்றி தன்னிடம் தந்துவிட்டு விசாரணைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி காதர் பீவி செய்துள்ளார். பின்னர் அந்த பெண் செயினுடன் தலைமறைவாகி விட்டார். புகாரின் பேரில் பேட்டை போலீசார் விசாரணை.

error: Content is protected !!