News April 28, 2025

மருத்துவ மாணவரிடம் ரூ.11 லட்சம் மோசடி

image

வேலூர், தனியார் மருத்துவ கல்லூரியில் 27 வயது மாணவர் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலிகிராம் செயலியில் ஆன்லைன் பகுதி நேரம் மூலம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி பல தவணைகளாக மொத்தம் ரூ11 லட்சம் முதலீடு செய்துள்ளார். மேலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என கூறிய போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர் போலீசில் புகார் அளித்தார்.

Similar News

News December 3, 2025

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!

News December 3, 2025

வேலூர்: வரதட்சணை சித்திரவதை – இளம்பெண் திடீர் சாவு

image

பள்ளிகொண்டா அடுத்த வல்லாண்டராமம் பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி கோகுலா(20). கோகுலா சீர்வரிசை கொண்டு வரவில்லை எனக்கூறி மதன், அவரது குடும்பத்தினர் கோகுலாவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட கோகுலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

வேலூரில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

image

வேலூர்: பொன்னை அருகே மாநில எல்லை சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட பிரவீன் (33), ராஜா (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியையும், அரிசியையும் பறிமுதல் செய்து உணவு கடத்தல் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!