News April 27, 2025
மருத்துவ பொருள்களைப் பெற போராடும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது. அந்நாட்டில், ஒரு ‘மருத்துவ அவசரநிலை’ எழுந்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ரத்தானதை அடுத்து, புற்றுநோய், ரேபிஸ் போன்ற சில நோய்களின் மருந்துகளை சேமிக்க அந்நாட்டின் Ministry of Health அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தற்போது அதன் மருந்து தேவைகளில் 30% – 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது.
Similar News
News April 29, 2025
PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.
News April 29, 2025
PM மோடியை சந்தித்த நயினார் நாகேந்திரன்

டெல்லியில் PM மோடியை TN பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த முதல் சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடியிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் நயினார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
News April 29, 2025
வெற்றிமாறனுக்கு கண்டிஷன் போட்ட சூர்யா!

அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இன்னும் சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் தொடங்கவில்லை. இந்த ஆண்டில் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், வெற்றிமாறனுக்கு சூர்யா ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். இவரு பாட்டுக்கு வருஷ கணக்குல ஷூட்டிங் எடுத்துட்டு இருக்க போறாரு என்ற பயத்தில், வெற்றிமாறனிடம் முழு ஸ்கிரிப்ட் கேக்கிறாராம் சூர்யா. அவருக்கும் விடுதலை சம்பவம் தெரிஞ்சிருக்கும்ல!