News February 16, 2025
மருத்துவரின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரின் மனைவி உமாதேவி, சங்கர்கணேஷ் என்பவரிடம் 2021ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கடனாக பெற்றார். கடனுக்காக வங்கி காசோலையை உமாதேவி, வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டதால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
Similar News
News January 1, 2026
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News January 1, 2026
ராணிப்பேட்டை மக்களுக்கு எஸ்.பி. அய்மன் ஜமால் புத்தாண்டு வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ராணிப்பேட்டை மக்கள் அனைவருக்கும் தனது 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிறக்கும் 2026 புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வளத்தை நிறைக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் புத்தாண்டை பொறுப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.
News January 1, 2026
ராணிப்பேட்டை: சாவியால் சரமாரியாக தாக்கிய ட்ரைவர்!

சோளிங்கர் ரயில் நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் சூரைக்குளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை, சக ஓட்டுநர் அருண் ஆட்டோ சாவியால் சரமாரியாகத் தாக்கினார். காது மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


