News February 16, 2025
மருத்துவரின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரின் மனைவி உமாதேவி, சங்கர்கணேஷ் என்பவரிடம் 2021ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கடனாக பெற்றார். கடனுக்காக வங்கி காசோலையை உமாதேவி, வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டதால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
Similar News
News December 18, 2025
ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.18) பொது சுகாதார செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.யூ.சந்திரகலா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கருக்கலைப்பு நிகழ்வுகளின் காரணங்களை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஸ்கேன் சென்டர்களில் மாதந்தோறும் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
News December 18, 2025
ராணிப்பேட்டை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

ராணிப்பேட்டை மக்களே.., நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். பின்பு SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். TamilNilam என்ற செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE
News December 18, 2025
ராணிப்பேட்டை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.( SHARE )


