News March 5, 2025
மருத்துவமனை கட்டுவதாக மோசடி

அருப்புக்கோட்டையை சேர்ந்த பானுமதி என்பவரிடம் மதுரை சிந்தாமணியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி வருவதாகவும், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36% முதல் வட்டி தருவதாகவும், இவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் மேலும் சிலர் பணம் செலுத்தியுள்ளதால் அதில் பணம் கிடைக்காதவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.
Similar News
News September 19, 2025
விருதுநகர்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 19, 2025
விருதுநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை? CLICK செய்யுங்க

விருதுநகர் துணைமின் நிலையத்தில் நாளை (செப். 20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நகர், பழைய பஸ் நிலைய பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை. இதேபோல, பெரியவள்ளிகுளம் துணைமின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. நாளை விருதுநகர் மாவட்டத்தில் எங்கெல்லாம் மின்தடை என <
News September 18, 2025
விருதுநகர்: தலைமறைவாக இருந்த உதவியாளர் கைது

விருதுநகர் டாஸ்மாக் மதுபான குடோனில் உதவியாளராக பணிபுரிந்த பிரேம்குமார் ரூ.150 லஞ்சம் கேட்டதாக 2008-ம் ஆண்டு இவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து ஸ்ரீவி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானார். இவருக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மதுரையில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.