News January 23, 2025
மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

தேவகோட்டை வட்டம் திருவேகம்பத்தூர் ஊராட்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கூடுதல் கட்டிடமாக மருத்துவமனை கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உதவி செயற்பொறியாளர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 11, 2025
சிவகங்கை:20கி.மீ துரத்திய அதிகாரிகள்; கவிழ்ந்த கடத்தல் லாரி

ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக சிவகங்கை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காரைக்குடி அருகே கல்லூர், கீழாநிலைக்கோட்டையில் நேற்று வாகன சோதனை மேற்கொண்ட போது, மினி லாரி ஒன்று தப்பி ஓடியது. 20 கி.மீ. தூரம் விரட்டிய போலீசார், கருவியபட்டி அருகே சென்ற போது லாரி கவிழ்ந்தது. லாரியை மீட்டு, 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் தப்பியோடியதால், அவரை தேடி வருகின்றனர்.
News August 10, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
சிவகங்கை: சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

சிவகங்கை மக்களே நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.