News April 13, 2025

மருதமலை முருகன் கோயில்!

image

கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க!

Similar News

News November 8, 2025

கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (15). இவர் நேற்று முந்தினம் இவரது சகோதரியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் அவரிடம் விளையாட்டாக தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து கடைவீதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

கோவைக்கு மற்றொரு வந்தே பாரத் சேவையை தொடங்கும் மோடி!

image

கேரள மாநிலம் எர்ணாகுளம்–பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நவம்பர் 8 அன்று காலை 8 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்குகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் இந்த ரயில் சேவை தெற்கு ரயில்வே நேர அட்டவணையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல பயணிகள் பெரிதும் பயனடைய உள்ளனர்.

News November 7, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!