News August 10, 2024
மரவள்ளி கிழங்கு குறித்து இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மரவள்ளி பயிர்களுக்கேற்ற மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும் 12.08.24-ந் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
நாமக்கல்: வங்கி ஊழியரிடம் திருட்டு

நாமக்கல் வீசாணத்தைச் சேர்ந்த கோகிலா (33) வங்கி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம் தேதி பணியை முடித்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் வீட்டுக்கு சென்றபோது, பஸ்சின் பின்புறம் நின்ற மர்ம நபர்கள் அவரின் பையில் இருந்த பர்ஸில் இருந்து ரூ.15,000 திருடினர். இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 27, 2025
நாமக்கல்: வங்கி ஊழியரிடம் திருட்டு

நாமக்கல் வீசாணத்தைச் சேர்ந்த கோகிலா (33) வங்கி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம் தேதி பணியை முடித்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் வீட்டுக்கு சென்றபோது, பஸ்சின் பின்புறம் நின்ற மர்ம நபர்கள் அவரின் பையில் இருந்த பர்ஸில் இருந்து ரூ.15,000 திருடினர். இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 27, 2025
நாமக்கல்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


