News August 10, 2024
மரவள்ளி கிழங்கு குறித்து இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மரவள்ளி பயிர்களுக்கேற்ற மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும் 12.08.24-ந் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
நாமக்கல் : கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

நாமக்கல் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 12, 2025
நாமக்கல்: வாக்காளர்களே! SIR UPDATE

நாமக்கல் மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 12, 2025
பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

பள்ளிப்பாளையம் அருகே வசந்த நகரை சேர்ந்த குமரன் 40, ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம், அன்னை சத்யா நகரை சேர்ந்த கதிர், 20, என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 8ம் தேதி குமரன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு புதுச்சேரி சென்று விட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் வைத்திருந்த, ரூ.2.21 லட்சத்தை திருடியதாக விசாரணையின் அடிப்படையில் கதிரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


