News April 13, 2025

மரம் விட்டு மரம் தாவி பக்தர்களுக்கு அருள் வாக்கு..

image

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று, பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 பால் குட ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாமியாடிய நபர் ஒருவர் வினோதமாக மரத்தில் ஏறியும், மரம் விட்டு மரம் தாவியும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். காப்பு கட்டிய ஏராளமான பெண்களும் அருள் வந்து கொளுத்தும் வெயிலிலும் சாமியாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

Similar News

News April 19, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 18, 2025

வேலூர் மாவட்டத்தில் 101 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 101 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News April 18, 2025

வேலூரின் சம்மர் டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்

image

வேலூருக்கு அருகில் இந்த கோடை விடுமுறைக்கு ஏற்ற பட்ஜெட் சுற்றுலா தலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பாலமதி மலை
2.ஏலகிரி
3.புங்னூர் ஏரி
4.அமிர்தி காடு
5. கைகால் நீர்வீழ்ச்சி
இப்பவே உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க

error: Content is protected !!