News May 15, 2024
மரம் நடும் பணியினை துவக்கி வைத்த கலெக்டர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஞ்சேஹள்ளி ஊராட்சி, ரங்காபுரம் கிராமத்தில் மரம் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று துவக்கி வைத்து நட்டு வைத்த மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றினார். உடன் வட்டாட்சியர் சுகுமார் உட்பட தொடர்புடைய
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 21, 2025
தருமபுரி வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

தருமபுரி மாவட்ட பொதுமக்களுக்கு அறிய வாய்ப்பு, SIR திட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்காக, புதிய வாக்காளர்கள் சேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் வரும் டிச.27 (சனி), டிச.28 (ஞாயிறு) மற்றும் ஜன.03 (சனி), ஜன.04 (ஞாயிறு) ஆகிய 4 நாட்களில் நடைபெறுகிறது. மேலும்,வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, மாறுதல் செய்ய அணுகலாம்.
News December 21, 2025
தருமபுரியை உலுக்கிய பெரும் சோகம்!

தருமபுரி, கொண்டகரஅள்ளி பகுதியை சேர்ந்த காவியா (17), தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் (Anaesthesia Technology) பயின்று வருகிறார். பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியில் முடித்திருந்த அவர், மருத்துவப் பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் அவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவியா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.
News December 21, 2025
தருமபுரி: gpay, phonepay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


