News March 27, 2025

மரகதநடராசர் சந்தனகாப்பு கலைக்கப்பட்டு காட்சி

image

இராமநாதபுரம், திருஉத்திரகோசமங்கையில் வருகின்ற 4.4.2025 வெள்ளிக்கிழமை அன்று திருஉத்திரகோசமங்கையில் கும்பாபிஷேகம் நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு ஆண்டிற்கு ஒருநாள் மட்டும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் மரகதநடராசர், ஏப்.1 மாலை 5 மணி முதல் ஏப்.4 மாலை வரை சந்தனகாப்பு கலைக்கப்பட்டு மரகதமேனியாக காட்சியளிக்க உள்ளார். (இக்கோயிலுக்கு வருவோருக்கு நோய் தீரும் என்பது நம்பிக்கை) * மறக்காம ஷேர் செய்யுங்கள்*

Similar News

News April 6, 2025

பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் பழுது

image

ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பால தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் தற்போது பழுதாகி இருப்பதாக வெளி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குத்து பாலம் ஒரு பக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கமாக இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 6, 2025

ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

image

பாம்பன் ரயில் புதிய செங்குத்து பாலத்தை இன்று திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதாபுரம் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாம்பம் வந்தார். பின்னர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த மோடி தற்போது ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

News April 6, 2025

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழாவில் 42 பவுன் திருட்டு

image

உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயிலில் நான்கு ரத வீதிகள் மற்றும் தரிசனத்திற்காக நின்ற கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பெண்களிடம் கொள்ளையர்கள் 42 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.கழுத்தில் இருந்த செயின் திருடு போனதை அறிந்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் வரிசையாக புகார் அளித்தனர்.

error: Content is protected !!