News March 28, 2025

மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News January 1, 2026

மயிலாடுதுறை: ரயில் நேரமாற்றம் அறிவிப்பு

image

சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் தினசரி சோழன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து 15 நிமிடம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் எனவும் திருச்சியில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக மதியம் 12:10 மணிக்கு ரயில் புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

News January 1, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 பலி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து சாலை விபத்துகளை குறைத்திடும் பொருட்டு பொது இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பலனாக கடந்த 2024ல் பதிவு செய்யப்பட்ட 155 சாலை இறப்பு விபத்துகளை ஒப்பிடும்போது, 2025ல் 103 சாலை இறப்பு விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் குறைவாகும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News January 1, 2026

மயிலாடுதுறை: 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 27 நபர்கள், திருட்டு குற்றங்களில் – 3 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் – 14 நபர்கள், போதைப் பொருள் கடத்தல் – 1 நபர், பாலியல் குற்றங்களில் – 5 நபர் என மொத்தம் 50 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2024-ஆம் ஆண்டு 47 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!