News March 28, 2025

மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News January 8, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5414 வழக்குகள் பதிவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 5414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 14 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு குற்றங்களின் ஈடுபடுபவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி தெரிவித்துள்ளார்

News January 8, 2026

மயிலாடுதுறை: கனமழை எச்சரிக்கை; கலெக்டர் அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வருகிற ஜன.9 மற்றும் 10 தேதிகளில் கடுமையான மழைப்பொழிவு வர உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மின் கம்பங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் அருகே நிற்க வேண்டாம், மழையில் நனையாமல் தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும், கால்நடைகளை மின்கம்பங்கள் அருகில் செல்லாமல் பாதுகாக்க தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரி செல்பவர்கள், சிறப்பு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுடன் சிறப்பு பள்ளி செல்பவர்களுக்கு, பேருந்து இலவச பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்று ஜன.7 முதல் ஜன.31-ஆம் தேதி வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!