News March 28, 2025

மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News September 17, 2025

மயிலாடுதுறை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

மயிலாடுதுறை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

மயிலாடுதுறை: லாரி டிரைவரை தாக்கிய இளைஞர்கள்

image

தலைஞாயிறை சேர்ந்தவர் கார்த்திநாதன் லாரி டிரைவரான இவர், ஆதமங்கலத்தைச் சேர்ந்த அருள்பாண்டியன், விஜயபாஸ்கர் இருவரும் யூகலிப்டஸ் மரங்களை வெட்டுவதை பார்த்து தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருண்பாண்டியன், விஜயபாஸ்கர் கார்த்திக்நாதனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து கார்த்திக்நாதன் கொடுத்த புகாரின்பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விஜயபாஸ்கரை கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர்.

News September 17, 2025

மயிலாடுதுறை: இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் ரோனிக்ராஜ் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் நேரடியாக கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!