News August 10, 2024

மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரை செல்லும் முன்பதிவில்லா இரயில்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தென் தமிழகத்திலிருந்து அனைத்து ரயில்களும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில் நாளை திருச்சியிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முன்பதிவு செய்ய தேவை இல்லை. திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை செல்கிறது.

Similar News

News December 10, 2025

மயிலாடுதுறை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பா உள்ளிட்ட முக்கிய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால், அறிவிப்பு செய்யப்பட்ட நிவாரணத் தொகையை விரைவில் வழங்க முன்வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

News December 10, 2025

மயிலாடுதுறை: ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 9 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான தனிப்பிரைவு போலீசார் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இரண்டு நாள்களில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 10, 2025

மயிலாடுதுறை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில்,<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!