News August 10, 2024
மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரை செல்லும் முன்பதிவில்லா இரயில்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தென் தமிழகத்திலிருந்து அனைத்து ரயில்களும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில் நாளை திருச்சியிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முன்பதிவு செய்ய தேவை இல்லை. திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை செல்கிறது.
Similar News
News December 16, 2025
மயிலாடுதுறை: குளத்தில் சடலம் மீட்பு

தர்மதானபுரம், ஆத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள சாவடி குளத்தில், (40) வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, வைத்தீஸ்வரன் கோயில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்தது யார், எந்த ஊரை சேர்ந்தவர், இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
மயிலாடுதுறை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மயிலாடுதுறை, பொறையாரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பொறையாா் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டிச.20ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்துகொண்டு பயான்பெருமாறு தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
மயிலாடுதுறை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மயிலாடுதுறை, பொறையாரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பொறையாா் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டிச.20ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்துகொண்டு பயான்பெருமாறு தெரிவித்துள்ளார்.


