News August 10, 2024
மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரை செல்லும் முன்பதிவில்லா இரயில்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தென் தமிழகத்திலிருந்து அனைத்து ரயில்களும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில் நாளை திருச்சியிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முன்பதிவு செய்ய தேவை இல்லை. திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை செல்கிறது.
Similar News
News October 23, 2025
மயிலாடுதுறை: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 23, 2025
மயிலாடுதுறை: பொறையார் அருகே முதியவர் கொலை

பொறையார் காவல் சரகம் ஆனைகோயில் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம்(65) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜமூர்த்தி(22) என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜமூர்த்தி கத்தியால் அமிர்தலிங்கத்தை நெஞ்சில் தாக்கிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பொறையார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News October 23, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.