News April 14, 2024
மயிலாடுதுறை: யாரும் குளிக்க வேண்டாம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான இன்று கடற்கரையில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Similar News
News September 19, 2025
மயிலாடுதுறையில் பெய்த மழையின் அளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 75 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 67.60 மிமீ, செம்பனார்கோவிலில் 61.மிமீ சீர்காழியில் 42.மிமீ மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 19, 2025
மயிலாடுதுறை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மயிலாடுதுறை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
மயிலாடுதுறை: மாணவி கொடுத்த அதிர்ச்சி புகார், சிக்கிய இளைஞர்!

மயிலாடுதுறையில் உள்ள பிரவுசிங் சென்டரில் கல்லூரி மாணவி பாஸ்போர்ட் பதிவு செய்ய சென்றபோது, ஊழியர் ஒருவர் பாஸ்போர்ட் பதிவு செய்ய மாணவியின் செல்போனில் ஏர்ட்ராய்டு பேரண்டல் கண்ட்ரோல் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தந்துள்ளார். இந்த செயலி மூலம் மாணவியின் செயல்பாடுகளை கேமரா மற்றும் திரை மூலம் கண்காணித்துள்ளார். மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்ரித் (28) என்பவரை கைது செய்தனர்.