News April 4, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

Similar News

News December 19, 2025

மயிலாடுதுறை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் உதவி

image

மயிலாடுதுறை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News December 19, 2025

மயிலாடுதுறை: 1,264 வழக்குகளுக்கு தீர்வு

image

மயிலாடுதுறை கோர்ட்டில் மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் நீதிபதி சுதா முன்னிலை வகித்தார். சிவில் வழக்குகள், குற்றவழக் குகள், மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய வழக்குகள். குடும்பநல வழக்குகள் உட்பட 1,264 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடியே 40 லட்சம் தீருதவித்தொகையாக பெற்றுத்தரப்பட்டது.

News December 19, 2025

மயிலாடுதுறை: ஆர்ப்பாட்டம் செய்த எம்பி

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களின் பெயரினை நீக்கம் செய்ததை மட்டும் இல்லாமல் அந்த திட்டத்தில் பல மாறுதலை கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

error: Content is protected !!