News April 4, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
Similar News
News December 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தப் பணிகள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
News December 14, 2025
மயிலாடுதுறை: மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் சென்ற திரும்பிய கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 1.11.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொண்ட பயனாளிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
News December 14, 2025
மயிலாடுதுறை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


