News August 17, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 9, 2025
மயிலாடுதுறை: கால அவகாசம் நீட்டிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு நவ.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதாா், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி நவ.15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
News November 9, 2025
மயிலாடுதுறை: போதையில் ரகளை; அதிரடி கைது

பொறையாறு அருகே அரசலங்குடி கிராமம் வழியாக நேற்று முன்தினம் மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேனை வழிமறித்த போதை இளைஞர்கள் சிலர் வேன் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, வேன் கண்ணாடியை உடைத்த தாமரைச்செல்வன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஆகாஷ், கபிலன் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News November 9, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


