News April 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (நவ.14) காலை 9 மணி முதல் 3 மணி வரை மயிலாடுதுறை கச்சேரி சாலை யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 04364299790 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 13, 2025
மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 13, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா தாளடி பயிர்களை, இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையாக ரூ.564ஐ அருகில் உள்ள பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


