News April 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை: போக்குவரத்து நிறுத்தம்

கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து உச்சிமேடு பாலுரான்படுகை உள்ளிட்ட 10 கிராமங்கள் வழியாக மாதிரிவேளூர் செல்லும் சாலையில் அரசடி என்ற இடத்தில் சாலை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கனமழையால் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு பிரதான சாலையாக விளங்கும் இந்த சாலை மூடப்பட்டதால் கிராம மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்
News December 4, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச 5) காலை 10 மணி முதல் 5 மணி வரை நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள் காப்பீட்டு தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டெடுக்க அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்
News December 4, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச 5) காலை 10 மணி முதல் 5 மணி வரை நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள் காப்பீட்டு தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டெடுக்க அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்


