News April 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுபவர்களுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெரும் விவசாயிகளுக்கு பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
News December 23, 2025
மயிலாடுதுறை: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரியை கண்டித்து மயிலாடுதுறையில் மண்டல அலுவலக ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதிகாரி ஒருவர் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர்.
News December 23, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் SBI KYC அப்டேட் போன்ற மேலே உள்ள புகைப்படத்தை போல், தங்கள் தொலைபேசிக்கு வரும் எந்த ஒரு APK பைல்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவிறக்கம் செய்தால் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோக நேரிடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


