News August 4, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: மங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், தைக்கால், சீயாளம், குமிலங்காடு, துளசேந்திபுரம், புங்கனூர், பெருமங்கலம், கற்கோவில், மருவத்தூர், மருதங்குடி, அரூர், திட்டை, செம்மங்குடி, திருக்கருகாவூர், விநாயககுடி, கீழாநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (திங்கள்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.SHARE NOW
Similar News
News November 10, 2025
மயிலாடுதுறை: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாப்படுகை பண்ணையார் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (42) என்பவர் விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 210 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
News November 10, 2025
மயிலாடுதுறை: கல் வீசிய கைக்கு மாவுக்கட்டு!

பொறையார் அரசலங்குடி பகுதியில் பள்ளி வாகனத்தை உடைத்து சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட தாமரைச்செல்வன் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷ் (20), கபிலன் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது ஆகாஷ் தப்பி செல்ல முற்பட்டபோது, கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
News November 10, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு 10 மணி முதல் இன்று (நவ.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


