News August 6, 2024
மயிலாடுதுறை – பெங்களூர் வரை செல்லும் ரயில் நிறுத்தம்

பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் இன்று முதல் 9 மற்றும் 11-ம் தேதிகளில் புறப்படும் காரைக்கால் விரைவு ரயில், மயிலாடுதுறை வழியாக காரைக்கால் வரை செல்லும் இந்த ரயில், விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து பெங்களுர் வரை செல்லும் பெங்களுர் விரைவு இரயில் 7 முதல் 10-ம் தேதி மற்றும் 12 தேதி வரை விருத்தாச்சலத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வரை மட்டுமே செல்லும்.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நாளை(டிச.11) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். இதேபோல ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
மயிலாடுதுறையில் 22 பேர் கைது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்ட ஊராட்சி துறை பணியாளர்கள் அரசுக்கு 11 அம்ச கோரிக்கை வைத்தனர். அதனையெடுத்து அதற்கு அரசானை வெளியிட சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்ட தயாராக இருந்த 22 பேரை நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
News December 9, 2025
மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


