News December 31, 2024

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும், பொதுக்கழிப்பறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இதில் நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News December 3, 2025

மயிலாடுதுறை: நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

image

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சம்பா விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News December 3, 2025

மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்து<<>> Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 3, 2025

மயிலாடுதுறையில் பெய்த மழை நிலவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 17.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 7.20 மி.மீ, மணல்மேட்டில் 8 மி.மீ, சீர்காழியில் 16.40 மி.மீ, தரங்கம்பாடியில் 12.30 மி.மீ, செம்பனார்கோயில் 9 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!