News March 28, 2025
மயிலாடுதுறை: திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
Similar News
News October 31, 2025
மயிலாடுதுறை: மெசேஜில் வரும் ஆபத்து எச்சரிக்கை

செல்போன் டவர் அமைக்க இடம் தேவை என்று தங்களுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டவர் அமைக்க காலியிடம் தேவை முன்பணம், வாடகை வழங்கப்படும் என வரும் குறுஞ்செய்திகளை க்ளிக் செய்தால் பணத்தை இழக்க நேரிடலாம். எனவே இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
News October 31, 2025
மயிலாடுதுறை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 31, 2025
மயிலாடுதுறை: குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

சீர்காழி தென்பாதி வஉசி தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (48). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருவேங்கடம் பிள்ளை குளத்தில் சங்கர் தண்ணீர் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


