News March 28, 2025
மயிலாடுதுறை: திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
News December 7, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
News December 6, 2025
மயிலாடுதுறை: தகராறில் காய்கறி கடை உரிமையாளர் பலி

சீர்காழி, திருப்புன்கூர் மெயின்ரோட்டில் ராஜா (52) என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கடைக்கு காய்கறி வாங்க வந்த மானந்திருவாசலை சேர்ந்த சந்திரசேகர்( 49) என்பவருக்கும், ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ராஜா பலத்த காயம் ஏற்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.


