News March 28, 2025
மயிலாடுதுறை: திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
Similar News
News December 23, 2025
மயிலாடுதுறை: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரியை கண்டித்து மயிலாடுதுறையில் மண்டல அலுவலக ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பொன் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதிகாரி ஒருவர் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர்.
News December 23, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் SBI KYC அப்டேட் போன்ற மேலே உள்ள புகைப்படத்தை போல், தங்கள் தொலைபேசிக்கு வரும் எந்த ஒரு APK பைல்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவிறக்கம் செய்தால் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோக நேரிடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 23, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் SBI KYC அப்டேட் போன்ற மேலே உள்ள புகைப்படத்தை போல், தங்கள் தொலைபேசிக்கு வரும் எந்த ஒரு APK பைல்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவிறக்கம் செய்தால் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோக நேரிடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


