News April 12, 2025
மயிலாடுதுறை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News September 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரப்பட்டியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மணல்மேடு,, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணிவரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கை குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News September 17, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
News September 17, 2025
சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டம் சோதியக்குடி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.