News April 12, 2025

மயிலாடுதுறை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News August 11, 2025

மயிலாடுதுறை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

image

மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 33 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

News August 11, 2025

மயிலாடுதுறையில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் திருமுல்லைவாசலில் உள்ள கூழையார் கடற்கரை ஒன்றாகும். இங்கு நதியும், கடலும் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிப்பதால் பார்பதற்கு மிக அழகானதாக தோன்றுகின்றது. பலரும் அறிந்திடாத ஈந்த கடற்கரையில் நிலவும் அமைதியான சூழலுக்காகவே இக்கடற்கரையை பற்றி அறிந்தவர்கள் அடிக்கடி வருகின்றனர். அனைவருக்கும் ஷேர் செய்து நம்ம ஊரு கடற்கரையை தெரியப்படுத்துங்கள்

News August 11, 2025

மயிலாடுதுறை: நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்காக நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான கொள்குறி வகையிலான தேர்வு வருகிற 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏவிசி தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஏவிசி இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த தேர்வினை 843 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!