News April 12, 2025
மயிலாடுதுறை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News December 22, 2025
மயிலாடுதுறையில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்!

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சஷ்டியப்த பூர்த்தி பீமரத சாந்தி சதாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்படுகின்றன. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு மலேசியா நாட்டை சேர்ந்த 44 பேர் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதில் 5 தம்பதிகள் 60 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் செய்து வழிபட்டனர்.
News December 22, 2025
மயிலாடுதுறை: வலைவீசி தேடிவரும் போலீசார்

கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ராஜம் (75). இவரது வீட்டில் நேற்று மர்மநபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பெயரில் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 22, 2025
மயிலாடுதுறை: தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி!

தில்லையாடியைச் சேர்ந்த கார்த்திகேயன் (58) ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திடீரென அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் கார்த்திக்கேயன் தவறி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் கார்த்திகேயன் விழுது கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


