News May 8, 2025
மயிலாடுதுறை: சீர்காழி மாணவி முதலிடம்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ள தனியார் பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் மாணவி மதுஷா 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சாதனை புரிந்துள்ள மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 11, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
News April 10, 2026
மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம், ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
News April 10, 2026
மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம், ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


