News August 2, 2024

மயிலாடுதுறை: குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குளிக்க அனுமதி

image

காவிரியில் 1,20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறையில் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் காவலர்கள் அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே இறங்கி குளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 1077 அல்லது 9442626792 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

மயிலாடுதுறை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 27, 2025

BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

image

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.29ம் தேதி மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!

News November 27, 2025

மயிலாடுதுறை: தகராறில் கொத்தனார் பலி

image

சீர்காழி திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் கண்ணன்(43) அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (43) இருவரும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ராஜா கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த கண்ணன் சீர்காழி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!