News April 3, 2024
மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியை சேர்ந்த ஏழு பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஏப்ரல் 4ஆம் தேதி விடுமுறை என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2025
மயிலாடுதுறை: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (SENIOR RELATIONSHIP OFFICER)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News April 8, 2025
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

வேப்பங்குளம் பெரியதெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருக்கும் இவரது மனைவி கோடீஸ்வரிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கோடீஸ்வரியை தாக்கி சுவற்றில் மோதியதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் இசம்வம் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி ராஜபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
News April 8, 2025
இளைஞரின் நற்செயலை பாராட்டிய எஸ்.பி

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் சாலை ஓரத்தில் கிடந்த ரூ.10,000 பணத்தை அவ்வழியாக சென்ற ஹேமந்த் குமார் என்பவர் எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். ஹேமந்த் குமாரின் நற்செயலை பொதுமக்கள் பாராட்டிய நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று ஹேமந்த்குமாரை நேரில் அழைத்து பாராட்டினார்.