News April 5, 2025

மயிலாடுதுறையில் வேலை: ஆட்சியர் அறிவிப்பு 

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் நோ்முக தேர்வுக்கு ஓராண்டுக்கு தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடன் ஏப்.10ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நோ்முக தோ்வில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

Similar News

News November 27, 2025

மயிலாடுதுறை: தகராறில் கொத்தனார் பலி

image

சீர்காழி திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் கண்ணன்(43) அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (43) இருவரும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ராஜா கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த கண்ணன் சீர்காழி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 27, 2025

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் ஆய்வு

image

மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனையில், நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மருத்துவமனை உள்ள மக்களிடம் உதவி கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். மேலும் இங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடனிருந்தனர்.

News November 27, 2025

மயிலாடுதுறை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை ( 8838595483) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்

error: Content is protected !!