News August 17, 2024
மயிலாடுதுறையில் விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு சாதனை புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ந் தேதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
மயிலாடுதுறையில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் உதவி ஆணையர் மாணிக்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்துவடிவேல் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News October 15, 2025
மயிலாடுதுறை: முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் புது மண்ணியாறு, தெற்குராஜன் வாய்க்கால், பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களும், நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்களும் உள்ளன. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால் கரைகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் நீர்வளத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
News October 15, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <