News August 17, 2024
மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷபீர் ஆலம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
Similar News
News November 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி மயிலாடுதுறை மாவட்ட கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் இத்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு வருகிற 30.11.2025-குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்யப்படாத படகுகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
மயிலாடுதுறை முழுவதும் வெடிகுண்டு சோதனை

புதுடெல்லியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.பி உத்தரவின் படி, மயிலாடுதுறையில் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், ஆலயங்கள், கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டு கண்டறியும்/அகற்றும் படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
News November 14, 2025
மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (நவ.14) காலை 9 மணி முதல் 3 மணி வரை மயிலாடுதுறை கச்சேரி சாலை யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 04364299790 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


