News August 17, 2024

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷபீர் ஆலம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

Similar News

News November 24, 2025

மயிலாடுதுறை: ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் ஊராட்சியில் அனந்தமங்கலம் அருகே உள்ள ஆற்றுப் பகுதியில், நேற்று இரவு சாலையில் சென்ற சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் காரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

News November 24, 2025

மயிலாடுதுறை: நீர் நிலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், தற்போது பரவலாக பல இடங்களிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஆறுகள் குளங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், வாய்க்கால் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் குழந்தைகளை செல்ல அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News November 24, 2025

மயிலாடுதுறை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!